மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; விவசாயி சாவு


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; விவசாயி சாவு
x

ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விவசாயி இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விவசாயி இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்(வயது 40). அதே ஊரை சேர்ந்தவர் லெட்சுமணன்(45) விவசாயி, இவர்கள் இருவரும் நேற்று மாலை ஒரத்தநாட்டை அடுத்துள்ள பனையக்கோட்டைக்கு சென்று விட்டு தஞ்சை-மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.

மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டினார். லெட்சுமணன் பின்னால் உட்கார்ந்து இருந்தார். இவர்கள் நெய்வாசல் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வந்த சாத்தனூரை சேர்ந்த சண்முகம்(60) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மோகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு- நேர் மோதிக்கொண்டன.

விவசாயி சாவு; மேலும் 2 பேர் படுகாயம்

இதில் படுகாயம் அடைந்த லெட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் மோகன் மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story