மாட்டுக் கொட்டகையில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு


மாட்டுக் கொட்டகையில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
x

மாட்டுக் கொட்டகையில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கரூர்

கரூர் கோடங்கிபட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50). விவசாயி. இவர் தனது வீட்டின் பின்புறம் மாட்டுக் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாட்டுக் கொட்டகையின் மேல் பகுதியில் இருந்து பாலசுப்பிரமணியன் கால் தவறி கீேழ விழுந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story