தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை


தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2023 7:45 PM GMT (Updated: 25 Aug 2023 7:45 PM GMT)

வடமதுரை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள ஆதம்ஸ்நகர் களத்துவீடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). விவசாயி. இவருக்கு சந்திரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முருகன் நேற்று தனது தோட்டத்து வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர், முருகனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story