பண்ணை தொழிலாளர்கள் திடீர் மறியல்


பண்ணை தொழிலாளர்கள் திடீர் மறியல்
x

கந்தர்வகோட்டை-கறம்பக்குடி சாலையில் பண்ணை தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை தாலுகாவில் அரசு மாநில எண்ணை வித்து பண்ணை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கடந்த ஒரு வார காலமாக வேளாண் துறை அதிகாரிகள் வயதை காரணம் காட்டி திடீரென பணி நிறுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள் கந்தர்வகோட்டை-கறம்பக்குடிசாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story