சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் சாரம் பிரிக்கும் பணி


சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் சாரம் பிரிக்கும் பணி
x
தினத்தந்தி 2 Jun 2022 9:03 PM GMT (Updated: 2 Jun 2022 9:16 PM GMT)

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் சாரம் பிரிக்கும் பணி நடந்தது.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நிலையிலும் மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிற்பங்களுக்கு பல மாதங்களாக வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணி சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து அடுத்த மாதம்(ஜூலை) 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ராஜகோபுரத்தின் தரை தளத்தில் இருந்து ஏழு நிலைகள் வரை ஆயிரக்கணக்கான சவுக்குக் கட்டைகளால் கட்டப்பட்ட சாரம் பிரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story