கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு
தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைபெற நடப்பு கல்வி ஆண்டில் 31.5.2022-க்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்த நிலையில் தற்போது இதற்கான கால அவகாசத்தை 30.6.2022 வரை நீட்டித்து தொழிலாளர் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார். எனவே நலவாரிய உறுப்பினர்கள் இம்மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story