மாவட்ட அளவில் மாணவர்களுக்கு தேர்வு போட்டி


மாவட்ட அளவில் மாணவர்களுக்கு தேர்வு போட்டி
x
தினத்தந்தி 9 Jun 2023 6:45 PM GMT (Updated: 9 Jun 2023 6:46 PM GMT)

மாவட்ட அளவில் மாணவர்களுக்கு தேர்வு போட்டி

விருதுநகர்


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பாக தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் வருடம் தோறும் நடைபெற்று வருகிறன்றன. இந்த ஆண்டும் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் மாநிலப் போட்டியில் பங்கேற்க மாவட்ட அளவில் 14, 17 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தேர்வு போட்டிகள் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாஹிர் உசேன் தலைமையில் 125-க்கு மேற்பட்டவர்கள் யோகாவினை செய்து காண்பித்தனர் இதில் வெற்றிபெறும் மாணவர்கள் மாநில அளவில் வருகின்ற 12-ந் தேதி சென்னையில் நடைபெறக்கூடிய போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்

இப்போட்டிகளுக்கு நடுவர்களாக கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிச்சை மற்றும் சீனிவாசன், கவிதா, ஷிலியா பிளாரன்ஸ், இந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் மணிமாறன் கலந்துகொண்டு போட்டியாளர்களை வாழ்த்தினார். ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story