50 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்து தேர்வு


50 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்து தேர்வு
x

50 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்து தேர்வு 9 தேர்வு மையங்களில் நடக்கிறது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர்கள் தலையாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிக்கை வெளியிடப்பட்டு 7.11.22 வரை இணையவழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது அப்பதவிக்கான திறனறி எழுத்து தேர்வு வருகிற 4.12.22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் மையங்கள் விவரமாவது:- ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாடானை சின்ன கீரமங்கலம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி, ராஜசிங்க மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இணையவழியில் விண்ணப்பித்த நபர்களுக்கு தேர்விற்கான ஹால் டிக்கேட் பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் அவரவர் அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப் பட்டுள்ளது. அதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வரப்பெற்ற விண்ணப்பங்களுக்குரிய விண்ணப்பதாரர்களுக்கு பதிவு அஞ்சல் வழியாக அனுமதி சீட்டு அனுப்பப் பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வு நாளன்று காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தேர்வு அறைக்குள் 9.50-க்குப்பின் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மற்றும் 10.50-க்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதார்கள் தேர்வுக்கான ஹால் டிக்கேட் கொண்டுவர வேண்டும். விண்ணப்பதாரர்கள் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிச் சீட்டு மற்றும் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை தவிர அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்கு கொண்டு வரக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story