ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தும் அதிகாரி நியமனம்...!


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தும் அதிகாரி நியமனம்...!
x

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னை,

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து 3 வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதியை யும் அவர் வெளியிட்டார்.

அதன்படி, காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம் ஜன.31, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப். 7, வேட்புமனு பரிசீலனை பிப். 8, வேட்புமனுவை திரும்பபெற கடைசி நாள் பிப். 10, வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதியும் நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, நகராட்சி ஆணையர் சிவக்குமாரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமனம் செய்து, மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.


Next Story