ஈரோடு : காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!


ஈரோடு : காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!
x

ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த குன்றி வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் அருகே தாளவாடி, ஆசனூர், பண்ணாரி வனப்பகுதி உள்ளது. மேலும் இந்த பகுதியில் புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, மான் மற்றும் கரடிகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகிறது.

இந்த வனப் பகுதி வழியாக திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் தினமும் பஸ், கார், இரு சக்கர வாக னங்கள், லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் கர்நாடகாவுக்கும், அங்கு இருந்து தமிழகத்துக்கும் வந்து சென்றது. இந்த பகுதிகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் உள்பட வன வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி ரோட்டில் உலா வந்து கடந்து செல்கிறது.

இந்த நிலையில், ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த குன்றி வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது யானை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று இருவரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக் கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story