எமசம்ஹாரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு


எமசம்ஹாரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x

கூரத்தாங்குடி எமசம்ஹாரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே கூரத்தாங்குடி கிராமத்தில் எமசம்ஹாரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story