மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
x

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மதுரை


மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாமில் சுமார் 70-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, கல்வித்தகுதிக்கேற்ப வேலைதேடும் இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். அதாவது, பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம். வேலைதேடுபவர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்தும் பயனடையலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களது கல்விச் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் எண் அட்டை மற்றும் புகைப்படத்துடன் அன்றைய தினம் காலை 10 மணிக்கு புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வர வேண்டும். இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் வழிகாட்டு மைய துணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story