தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு முகாம்


தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 10 April 2023 6:30 PM GMT (Updated: 10 April 2023 6:30 PM GMT)

தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி

கூடலூர்

கூடலூர் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில் கோவை தனியார் தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு அதிகாரி ஜெயதிலகன் மற்றும் மின் பொறியாளர் கனகவேல் ஆகியோர் பயிற்சி நிலையத்தில் இறுதியாண்டு பிட்டர், வயர்மேன் மற்றும் எலக்ட்ரிசியன் பிரிவு மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தினர். பயிற்சி மைய முதல்வர் ஷாஜி எம் ஜார்ஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார். மனித வள மேம்பாட்டு அதிகாரி ஜெயதிலகன் வேலைவாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். இந்த நேர்காணலில் பயிற்சி நிலையத்தில் பயிலும் பொருத்துநர், மின்கம்பியாளர் மற்றும் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் டெக்னிஷியன் பிரிவுகளிலுள்ள 42 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை மற்றும்உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியை அம்மினி நன்றி கூறினார்.


Next Story