தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
x

புதுச்சத்திரத்தில், நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வட்டார அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில், புதுச்சத்திரம் வட்டாரத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து, தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்புகிற நிறுவனங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குனரை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். எனவே, புதுச்சத்திரம் வட்டாரத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story