மின் ஒயர் திருட்டு


மின் ஒயர் திருட்டு
x

மின் ஒயர் திருட்டு போனது.

மதுரை

பேரையூர்,

பேரையூர் தாலுகா அதிகாரிபட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 49). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பொது மேலாளராக உள்ளார். அதிகாரிபட்டியில் தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் போர்வெல் அமைத்து மின் இணைப்பு வாங்குவதற்காக ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 600 மீட்டர் மின்ஒயரை அங்குள்ள அறையில் வைத்திருந்தார். இந்த நிலையில் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த மின்ஒயர் திருடு போனது. இது குறித்து ஜெகநாதன் சேடப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்வயரை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story