தற்காலிக துணைத்தலைவர் தேர்வு


தற்காலிக துணைத்தலைவர் தேர்வு
x

தற்காலிக துணைத்தலைவர் தேர்வு

தஞ்சாவூர்

கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சுமதி குணசேகரன் கடந்த 18-ந் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புதிய ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்கும் வரை ஊராட்சி நிர்வாகத்தை செயல்படுத்திட தற்காலிகமாக துணைத்தலைவர் மகாலட்சுமி என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பாகவும், ஊராட்சி நிர்வாகத்தில் இணைக்கையொப்பம் இடுவதற்கு 8-வது வார்டு உறுப்பினர் சரவணன் என்பவரை நேற்று நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சுதா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், மக்கள் நல பணியாளர், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story