கொட்டாம்பட்டி அருகேமஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளைகள் மாடு முட்டி 10 பேர் காயம்


கொட்டாம்பட்டி அருகேமஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளைகள் மாடு முட்டி 10 பேர் காயம்
x
தினத்தந்தி 17 March 2023 6:45 PM GMT (Updated: 17 March 2023 6:46 PM GMT)

கொட்டாம்பட்டி அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளாளபட்டியில் உள்ள முத்துப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்த மஞ்சுவிரட்டை காண்பதற்கு ஏராளமானோர் குவிந்தனர்.

வெள்ளாளபட்டியில் இருந்து கிராமத்தினர் ஜவுளி எடுத்து கொண்டு ஊர்வலமாக மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு நடைபெறும் தொழுவத்திற்கு அழைத்து வந்தனர்.

10 பேர் காயம்

பின்னர் கிராம கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் அனைத்து மாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மஞ்சுவிரட்டை காண்பதற்கு டிராக்டர், மினிவேன், கார் மீது அமர்ந்து பாதுகாப்பாக கண்டுகளித்தனர். சீறி பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். சில காளைகள் இளைஞர்களிடம் சிக்கின. சில காளைகள் பிடிபடாமல் ஓடின.

இந்த மஞ்சுவிரட்டில் சுமார் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கொட்டாம்பட்டி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story