மின் சிக்கன வார விழா


மின் சிக்கன வார விழா
x

வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் மின் சிக்கன வார விழா நடந்தது

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் கோட்டத்தின் சார்பாக மின் சிக்கன வார விழா வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வள்ளியூர் கோட்ட மின் செயற் பொறியாளர் வளனரசு தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் லாரன்ஸ், முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்த குமார், செல்வ கார்த்திக், பத்மகுமார் மற்றும் உதவி மின் பொறியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மின் சிக்கனம் குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story