குடிபோதையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு


குடிபோதையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:45 PM GMT)

சின்னசேலம் அருகே குடிபோதையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே மேலூரை அடுத்த கீழ் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை மகன் கொளஞ்சி(வயது 50). விவசாயியான இவர் மேலூர் கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் முத்தையன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் சாகுபடி செய்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் உடைய கொளஞ்சி சம்பவத்தன்று மேலூரில் தனது குத்தகை நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் குடிபோதையில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கொளஞ்சி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story