தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1.70 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
சட்டவிரோதமாக போதைப்பொருளை கடத்தி கொண்டு வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெள்ளை சிமெண்ட் கொண்டு வரும் கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 100 மூட்டைகளில் 10 டன் எடையுள்ள போதைப்பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த போதைப்பொருட்களின் மதிப்பு 1 கோடியே 70 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டவிரோதமாக போதைப்பொருளை கடத்தி கொண்டு வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story