போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விக்கிரமங்கலம் போலீசார் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. அதன்படி விக்கிரமங்கலம், ஸ்ரீபுரந்தான், ரெட்டிபாளையம், நாகமங்கலம், சாத்தம்பாடி, குணமங்கலம், உல்லியக்குடி, ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து போலீசார் சார்பில் முக்கியமான இடங்களில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டது.


Next Story