டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் உள்ளதா? என உடனடியாக ஆய்வு- நாளை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசின் வக்கீல்கள் குழுவுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் உள்ளதா? என உடனடியாக ஆய்வு- நாளை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசின் வக்கீல்கள் குழுவுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

டாஸ்மாக் கடைகளில் விலை நிலவரப்பட்டியல் வைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து உடனடியாக மத்திய அரசு வக்கீல்கள் ஆய்வு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


டாஸ்மாக் கடைகளில் விலை நிலவரப்பட்டியல் வைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து உடனடியாக மத்திய அரசு வக்கீல்கள் ஆய்வு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

டாஸ்மாக் கடைகள்

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறி இருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்து உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மது பாட்டில்களில் விலை விவரம், புகார் தெரிவிக்கும் எண் போன்றவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை எனக் குறைத்து அரசு அறிவிக்கவேண்டும்.

இதுதொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு உரிய உத்தரவை பிறப்பித்து, அவை பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த உத்தரவை 8 மாத காலமாக அமல்படுத்தவில்லை என்றும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே.கே. ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.

ஆய்வு செய்ய உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன், பாஸ்கரன் ஆகியோர் ஆஜராகி, டாஸ்மாக் கடைகளில் விலை நிலவர பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான வழிகாட்டுதல்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன என தெரிவித்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாநில அரசு தெரிவித்த தகவல்கள் குறித்து டாஸ்மாக் கடைகளில் மத்திய அரசு வக்கீல்கள் குழு ஆய்வு செய்து வருகிற 23-ந்தேதி (அதாவது நாளை) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த வழக்கு விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்தனர்.


Next Story