தே.மு.தி.க.வினர் அமைதி ஊர்வலம்


தே.மு.தி.க.வினர் அமைதி ஊர்வலம்
x
தினத்தந்தி 2 Oct 2022 6:45 PM GMT (Updated: 2 Oct 2022 6:46 PM GMT)

மயிலாடுதுறையில் தே.மு.தி.க.வினர் அமைதி ஊர்வலம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில், காந்தி பிறந்த நாளையொட்டி தே.மு.தி.க. சார்பில் அமைதி ஊர்வலம் மற்றும் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜலபதி தலைமையில் நடந்தது. முன்னதாக காந்திஜி சாலையில் இருந்து காந்தி சிலை வரை தே.மு.தி.க.வினர் ஊர்வலமாக சென்று அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராசிமதிவாணன், மாவட்ட துணை செயலாளர்கள் சாரங்கபாணி, ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story