அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க. சதித்திட்டம் தீட்டி வருகிறது - முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு


அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க. சதித்திட்டம் தீட்டி வருகிறது - முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
x

அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க. சதித்திட்டம் தீட்டி வருகிறது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

ஈரோடு,

பவானி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அம்மாபேட்டையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

ஆட்சிக்கு வந்து 1½ ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த திட்டங்களையும் தி.மு.க. முழுமையாக நிறைவேற்றவில்லை.

அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க. சதித்திட்டம் தீட்டி வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் அ.தி.மு.க. இயக்கத்தை முன்னாள் முதல்- அமைச்சரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் வழி நடத்தி செல்வார்.

எனவே அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story