தி.மு.க. சமூக அநீதிகளை செய்து வருகிறது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு


தி.மு.க. சமூக அநீதிகளை செய்து வருகிறது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Sep 2024 9:33 AM GMT (Updated: 17 Sep 2024 10:11 AM GMT)

திண்டிவனத்தில் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்

திண்டிவனம்,

திண்டிவனத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,

பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் தி.மு.க.செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதல்-அமைச்சருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பா.ம.க. போராடிவருகிறது.பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை.

கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்-அமைச்சர் அறிவிக்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.


Next Story