மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி


மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி
x

மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடந்தது.

கரூர்

நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 மாணவர்கள் குழுவினரும், 12 மாணவிகள் குழுவினரும் என மொத்தம் 24 குழுவினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் மாணவ, மாணவிகளுக்கு யூ-14, யூ-17, யூ-19 என 3 பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு சுற்று போட்டிகள் நடைபெற்றது. மாணவிகளுக்கான போட்டியில் யூ-14 பிரிவில் துளசிக்கொம்பு, மலைக்கோவிலூர், கல்லடை ஆகிய பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளிகள் முதல் மூன்று இடங்களையும், யூ-17 பிரிவில் எல்லைமேடு தனியார் பள்ளி முதல் இடத்தையும், வடசேரி அரசு பள்ளி 2-வது இடத்தையும், 3-வது இடத்தை அமுதசுரபி தனியார் பள்ளியும், யூ-19 பிரிவில் ஆர்.டி.மலை அரசு பள்ளி முதலிடத்தையும், துளசிக்கொம்பு தனியார் பள்ளி 2-வது இடத்தையும், தரகம்பட்டி அரசு பள்ளி 3-வது இடத்தையும் பெற்றனர். மாணவர்களுக்கான போட்டியில் யூ-14 பிரிவில் தரகம்பட்டி தனியார் பள்ளி முதல் இடத்தையும், பொரணி அரசு பள்ளி 2-வது இடத்தையும், புன்னம் சத்திரம் தனியார் பள்ளி 3-வது இடத்தையும் பெற்றது. யூ-17 பிரிவில் எல்லைமேடு தனியார் பள்ளி முதல் இடத்தையும், குளித்தலை அரசு பள்ளி 2-வது இடத்தையும், நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றது. யூ-19 பிரிவில் ஈ.வே.ரா. பொியார் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், குளித்தலை அரசு பள்ளி 2-வது இடத்தையும், ஜெகதாபி அரசு பள்ளி 3-வது இடத்தையும் பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Next Story