50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வினியோகம்


50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வினியோகம்
x

நீடாமங்கலம் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வினியோகம்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பண்ணை கருவிகள் 50 சதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் கூறியுள்ளாா். இது குறித்து அவர் கூறியதாவது:-

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடப்பாரை1, மண் வெட்டி 1, களை வெட்டி 1, இருப்பு சட்டி 1, கதிர் அறுக்கும் அரிவாள் 2 உள்ளிட்ட 5 வகையான பொருட்களின் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும். இந்த பொருட்கள் 50 சதவீத மானியம் போக ரூ.1,500 -க்கு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story