விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்


விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
x

சங்கராபுரத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதோடு, அதற்கு பதிலாக மஞ்சப்பையை பயன்படுத்த கோரி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான அதிகாரிகள், கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, கடைவீதி, பூட்டை ரோடு, பஸ் நிலையம் ஆகியபகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று அங்கிருந்த வியாபாரிகளிடம், மஞ்சப்பை பயன்படுத்திட வேண்டி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story