திண்டுக்கல், புதுக்கோட்டையில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை


திண்டுக்கல், புதுக்கோட்டையில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
x
தினத்தந்தி 13 Sep 2023 2:33 AM GMT (Updated: 13 Sep 2023 5:27 AM GMT)

திண்டுக்கல், புதுக்கோட்டையில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்,

தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த வகையில் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில், தொழிலதிபர் ரத்தினம் எங்கிருக்கிறார் என்ற விவரம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தொழிலதிபர் ரத்தினம் நடத்தி வரும் நிறுவனங்கள், செங்கல் சூளை, பெட்ரோல் பங்குகளில் சோதனை விரிவுபடுத்தப்படலாம் என அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விடிய, விடிய அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று 8 இடங்களில் சோதனை நடந்த நிலையில், கந்தர்வகோட்டை அறியானிப்பட்டி, புதுக்கோட்டை தனியார் ஆர்க்கிடெக் நிறுவனத்தில் நடந்த சோதனை மட்டும் நிறைவு பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 6 இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story