சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

புரட்டாசி மாத பவுர்ணமிையயொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் நேற்று குவிந்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

புரட்டாசி மாத பவுர்ணமிையயொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் நேற்று குவிந்தனர்.

சிறப்பு வழிபாடு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வருகை தந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் திடீரென பலத்த மழை பெய்தது.

இந்நிலையில் நேற்று காலையும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறிது நேரம் சாரல் மழை பெய்ததால் பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் சாரல் மழை நின்றதும் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, 1½ மணி நேரம் தாமதமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சிறப்பு அபிஷேகம்

பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலையேறி சென்றனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம், தேன் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story