சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்


சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்
x

பங்குனி மாத பிரதோஷத்தைெயாட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். வனத்துறை கேட் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலைப்பாதை வழியாக சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story