சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்


சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்
x

மார்கழி அமாவாசையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மார்கழி மாத அமாவாசையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் தாணிப்பறை அடிவாரப்பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story