வளர்ச்சி திட்ட பணிகள்


வளர்ச்சி திட்ட பணிகள்
x

கும்பகோணம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் ரூ.12 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், கொருக்கை ஊராட்சி புதுச்சேரி கிராமத்தில் செயல்படும் பொது வினியோகத் திட்ட அங்காடியில் உணவு பொருட்களின் இருப்பு குறித்தும், புதுச்சேரி பழனியாண்டவர் குளம் ரூ.9 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.

புதிய வகுப்பறை கட்டும் பணி

தொடர்ந்து அவர், கொருக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் குறித்தும், புதிய வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது அவர், வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார், தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், பூங்குழலி, உதவி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், அய்யப்பன், சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் பகவான்தாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story