கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனமுடைந்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனமுடைந்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனமுடைந்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை, எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் பவானி பிரியா (வயது 20). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (32) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதுடைய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு பவானி பிரியா. கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்ததால் கடந்த 1 வருடமாக பவானி பிரியா மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த பவானி பிரியா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார் பவானி பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story