விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 57 வருவாய் கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்காமல் புறக்கணித்ததை கண்டித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள் திருவெற்றியூர் கவாஸ்கர், கோடனூர் ராஜா, ஆதியூர் தம்பிராசு ஆகியோர் தலைமை தாங்கினர். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி தாசில்தார் கார்த்திகேயனிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பெண்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story