திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அரியலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் மாநில அரசின் உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதேபோல் அரியலூர் அண்ணா சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை தாங்கினார். கழக அமைப்பாளர் சிந்தனை செல்வன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பலர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினர்.


Next Story