நீட் தேர்வை கண்டித்து 3ம் தேதி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை கண்டித்து 3ம் தேதி திமுக மாணவரணி சார்பில்  ஆர்ப்பாட்டம்
x

தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 3ம் தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது 3ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


Next Story