எடப்பாடியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


எடப்பாடியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

எடப்பாடியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

எடப்பாடி:

எடப்பாடி பஸ் நிலையத்தில் திராவிடர் கழகம், இளைஞரணி திராவிடர் கழகம், திராவிடர் மகளிர் பாசறை சார்பில் வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற அறிவிப்பை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் கென்னடி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கலைவாணன், நிர்வாகிகள் கவியரசன், பாலு, கிருட்டினமூர்த்தி, அன்புமதி, அண்ணாதுரை, சந்திரசேகரன், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர அமைப்பாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.


Next Story