அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2023 7:30 PM GMT (Updated: 11 Oct 2023 7:30 PM GMT)

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரத்தில் அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மண்டல தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நாகராசன், நிர்வாகிகள் சண்முகம், மனோன்மணி, ரகுபதி, கோவிந்தன், முருகன், பசுவராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமனம் செய்யக்கூடாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் வரவு மற்றும் செலவுக்கு இடையே உள்ள பற்றாக்குறை தொகையை பட்ஜெட்டில் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிய ஊழியர்களை போதிய அளவில் நியமனம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகையை விரைவாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story