மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சத்யா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி, கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரங்கசாமி, அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாநில உதவி தலைவர் ஜெயக்கொடி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஊக்கத்தொகை ரூ.2 ஆயிரம் அனைவருக்கும் காலதாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நேரம், பணிகளை வரையறை செய்ய வேண்டும். ஆன்லைன் தொடர்பான பணிகளுக்கு, செல்போன், பேட்டரி செலவுகளை வழங்க வேண்டும். சம்பளத்தை பிரதி மாதம் 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை செலவிற்கு, ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story