தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை


தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 1 March 2023 6:48 PM GMT (Updated: 2 March 2023 10:47 AM GMT)

தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தையல் கலை தொழிலாளர்கள் தினத்தையொட்டி சங்க கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜசேகரன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பாரபட்சம் இல்லாமல் சமமான உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. இரவாங்குடி, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் மற்றும் வாரியங்காவல் ஆகிய பகுதிகளிலும் கொடியேற்றப்பட்டது. இதில் மாநில தலைவர் (பொறுப்பு) பாண்டியன், மாவட்ட தலைவர் விசன் ரவி, செயலாளர் தேவேந்திரன், துணை செயலாளர் ராஜா பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story