சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அப்புறப்படுத்த கோரிக்கை


சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அப்புறப்படுத்த கோரிக்கை
x

சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே பந்தனேந்தல் கிராமத்தில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிட பகுதிகளில் விளையாடி வருகின்றனர். விபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தையும், பழைய பள்ளி கட்டிடத்தையும் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பந்தனேந்தல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story