கிராவல் மண் அள்ள தடை விதிக்க கோரிக்கை


கிராவல் மண் அள்ள தடை விதிக்க கோரிக்கை
x

கிராவல் மண் அள்ள தடை விதிக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி

எஸ்.கல்லுப்பட்டி கிராம மக்கள் மற்றும் காரியாபட்டி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தோப்பூர் முருகன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், எஸ்.கல்லுப்பட்டி கிராமத்துக்கு சொந்தமாக 4 கண்மாய்கள் உள்ளது. இதில் ஒரு கண்மாயில் கிராவல் மண் அள்ளுவதற்கு ஒருசிலர் ஏற்பாடு செய்தனர். இந்த தகவல் கிடைத்ததும் பொதுமக்கள் சார்பாக சென்று கண்மாயில் கிராவல் மண் எடுக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த கண்மாயில் கிராவல் மண் அள்ள ஏற்பாடு செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்த கண்மாயில் நான்கு வழிச்சாலைக்கு கிராவல் மண் எடுத்ததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் இந்த கண்மாயில் கழிவுநீர் கலக்கிறது. எங்கள் கிராமத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் கண்மாய்களில் கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க கூடாது.

இ்வ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story