விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி
விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.
கிருஷ்ணகிரி
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள பி.திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 59). முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் மொபட்டில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜேந்திரன் இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story