மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 2 Oct 2023 7:30 PM GMT (Updated: 2 Oct 2023 7:31 PM GMT)

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் வாலிபர் பலியானார்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

பர்கூர் தாலுகா ஜிஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பூவரசன் (வயது 30). இவர் கடந்த 1-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அரசு கலைக்கல்லூரி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி பூவரசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story