கொத்தமங்கலத்தில் கால்நடை மருந்தக மேற்கூரை சேதம்


கொத்தமங்கலத்தில் கால்நடை மருந்தக மேற்கூரை சேதம் அடைந்தது.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள கால்நடை மருந்தக கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் அசம்பாவித சம்பவம் ஏற்படவில்லை. இருப்பினும் மழைநீர் கசிந்ததால் அங்குள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story