தொடர் மழையால் நிரம்பி வழியும் மருதாநதி அணை


தொடர் மழையால் நிரம்பி வழியும் மருதாநதி அணை
x

தொடர் மழை எதிரொலியாக மருதாநதி அணை நிரம்பி வழிகிறது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. 72 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்த அணையின் தண்ணீர் மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 65 அடியாக இருந்தது. இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

இந்தநிலையில் இன்று மருதாநதி அணை தனது முழு கொள்ளளவான 72 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 106 கன அடியாக உள்ளது. அணை நிரம்பியதால் அந்த தண்ணீர் அப்படியே அணையின் பிரதான வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வருகிறது. முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மருதாநதி அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ந்து அடைந்துள்ளனர். மேலும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் முதல்போக நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story