தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

பெரம்பலூர் மாவட்டம் உன் மங்கூன் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதி பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் குறைவாக வருகிறது. இதனால் கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பநந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வே்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், உன்மங்கூன்

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெம்பாவூர், வடகரை ஆகிய ஊர்களுக்கு இடையில் ஆறு ஒன்று உள்ளது. இந்த ஆற்றின் கரைப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றனர். இந்த குரங்குகள் அனைத்தும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள சமையல் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச்சென்று விடுகின்றது. மேலும் கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெம்பாவூர்.

நாய்கள் தொல்லை

பெரம்பலூர் கடைவீதி மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும்மக்களை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்

நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் தேனூர் கிராமத்தில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் ஏராளமானவை வளர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடும் தண்ணீர் தட்டுப்பாட்டு உள்ளது. இதனால் கால்நடைகள் கூட தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,தேனூர்

மருதையாற்றை விரைந்து சீரமைக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள பச்சை மலைத்தொடரில் உற்பத்தியாகி மாவட்டத்தின் பெரம்பலூர், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களை இணைக்கும் வகையில் பாய்ந்தோடி அரியலூரில் நுழைந்து கொள்ளிடத்தில் மருதையாறு கலக்கிறது. மருதையாற்றின் பனங்கூர், குரும்பாபாளையம் பகுதிகளில் நிறைய சீமைக்கருவேல மரங்கள், சம்பு உள்ளிட்டவைகள் முளைத்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆறு மற்றும் மக்களின் நலன் கருதி விரைந்து மருதையாற்றை சீரமைக்க நீர்வளம்தைப் பெருக்கும் முனைப்போடு செயல்படும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரைந்து ஆவண செய்யக் கோருகிறோம்.

பொதுமக்கள், குரும்பாபாளையம்


Next Story