அரசு பஸ்களில் இலவசமாக தினமும் 2 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் பயணம்-போக்குவரத்து கழக முதன்மை செயலாளர் தகவல்


அரசு பஸ்களில் இலவசமாக தினமும்   2 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் பயணம்-போக்குவரத்து கழக முதன்மை செயலாளர் தகவல்
x

மதுரை மாவட்டத்தில் அரசு பஸ்களில் இலவசமாக தினமும் 2 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் பயணம் செய்கின்றனர் என போக்குவரத்து கழக முதன்மை செயலாளர் கூறினார்.

மதுரை

மதுரை

மதுரை மாவட்டத்தில் அரசு பஸ்களில் இலவசமாக தினமும் 2 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் பயணம் செய்கின்றனர் என போக்குவரத்து கழக முதன்மை செயலாளர் கூறினார்.

ஆய்வு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் புதூர் டெப்போ மற்றும் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில், போக்குவரத்து கழக முதன்மை செயலாளர் கோபால் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், இலவச பயண திட்டத்தில் பெண்கள் அனைவரும் நாள்தோறும் பஸ்களில் பயணம் செய்யும் போது கண்டக்டர்கள் இலவச பயணச்சீட்டு வழங்குகிறார்களா, கனிவான முறையில் நடந்து கொள்கிறார்களா என கேட்டறிந்தார். மேலும் பஸ்கள் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா, உரிய நேரத்தில் அலுவலர்கள், பணியாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு வருகை புரிகின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் அவர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளிதாக செல்லும் வகையில் சரியான நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதே போல் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

8 கோடி பேர் பயணம்

அதன்பின் அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து நான் மதுரையில் நேரடி ஆய்வு செய்தேன். இங்கு இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் நாள்த்தோறும் 405 சாதாரண நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் தினமும் சுமார் 2.25 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். இது சாதாரண நகரப்பேருந்துகளில் பயணிப்பவர்களில் 65.31 சதவீதம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் இதுவரை 8.03 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். அதன்பின் முதன்மை செயலாளர் கோபால், மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகருடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டல மேலாண் இயக்குனர் ஆறுமுகம், முதன்மை நிதி அலுவலர் கண்ணன், பொது மேலாளர்(மதுரை) இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story