மாண்டஸ் புயல் எதிரொலி: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?


மாண்டஸ் புயல் எதிரொலி: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
x
தினத்தந்தி 9 Dec 2022 1:27 AM GMT (Updated: 9 Dec 2022 2:35 AM GMT)

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் தீவிரமடைந்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், தி.மலை, தர்மபுரி, நாகை, சிவகங்கை, திருப்பத்தூர், ராமநாதபுரம், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* கனமழை காரணமாக தேனியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (09.12.2022) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

* திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் சிறுமலை ஆகிய மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* புயல் மற்றும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (09.12.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


* புயல் மற்றும் கனமழை காரணமாக கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (09.12.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கனமழை மற்றும் காரணமாக கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை, ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story